கொரனாவே!. நில்!.. கேள்.
<<<<>>>>>>-
கொல்லும் பெருநோய் கொரனாவே பாரினை
வெல்லும் திறமாய் விரைந்தழித்தால் - வல்லவர்கள்
வாடிக் கிடப்பாரோ வாய்க்குமோர் நல்மருந்து
தேடித் தருவர் தெரி! 1.
வெல்லும் திறமாய் விரைந்தழித்தால் - வல்லவர்கள்
வாடிக் கிடப்பாரோ வாய்க்குமோர் நல்மருந்து
தேடித் தருவர் தெரி! 1.
தெரிந்திடுவாய்!
மக்கள் திணறிடும் வாழ்வைப்
புரிந்திங்கு போய்த்தொலை வாயே! - மரிப்பவர்
பல்குதல் கண்டாம் பதைக்கமனம் நிற்கிறோம்
புல்லனே விட்டோடிப் போ! 2.
போய்த்தொலை
நீயிங்கு போடுகின்ற ஆட்டத்தைச்
சாய்த்துனைப் பாடையிற் தானேற்றி - மாய்த்திடுவோம்
தள்ளித் துயரினைத் தாரணி காத்திடுவோம்
துள்ளிக் குதிப்போம் துணிந்து! 3.
துணிந்தே
யெழுந்தோம் தொடரா யெதிர்ப்போம்
தணிந்தால் மகிழ்ந்தே சகிப்போம் - பணிந்து
விலகி நலத்தை விளைவிப்பாய் நன்றே
உலகம் மதிக்கும் உனை! 4.
உனையார்
உருவாக்கி ஊருக்குள் விட்டார்
நனையத் துயரினில் நாடு - நினையாய்!
மனத்தாற்
பலரிங்கு வாடியே மாய்ந்தாற்
தினமும் முறையோ சினந்து! 5.
விரைவாய்ப்
பரவி மிகவலி தந்தோய்!
இரையெனக் கொண்டாய் எமையேன்! - வரையறை
இன்றி மரணத்தின் ஈட்டியெனப் பாய்கின்றாய்
சென்றுவிடு இன்றே சிறப்பு! 6.
கொன்று
குவிக்கும் கொரொனாவே நீயிங்கு
வென்று களிக்க விடுவோமா? - இன்றென்ன
என்றுமுன் கோரமுகம் இவ்வுலகார் நெஞ்சினுள்
நின்று வருத்தும் நிலைத்து! 7.
ஆற்றுப்
படுத்தவென ஆள்வோர் துடிக்கின்றார்
நேற்றுப் படுத்தோரும் நீங்கினார் - கூற்றனே
தூக்கிக் கொடுவாள் துரத்தினும் நாமுன்னைத்
தாக்கி எழுவோம் தகர்த்து! 8.
காலனவன்
எய்தவொரு அம்பாய் நீ
ஞாலமிதைக் கவ்விடும் நஞ்சாகி - வாலசைத்து
வட்டமிடல் ஏனோ மறைந்தே யழித்தாலும்
காட்டுவோம் எம்திறன் காண்! 9.
பாடையில்
உன்னைப் படுக்க வைத்திங்கு
பீடையைப் போக்கிப் பிறப்பெடுப்போம் - கூடையில்
கொத்துமலர் கொண்டாற்போல் கூத்தாடிப் பூமியில்
மெத்தச் சுகிப்போம் மிளிர்ந்து! 10.
புரிந்திங்கு போய்த்தொலை வாயே! - மரிப்பவர்
பல்குதல் கண்டாம் பதைக்கமனம் நிற்கிறோம்
புல்லனே விட்டோடிப் போ! 2.
சாய்த்துனைப் பாடையிற் தானேற்றி - மாய்த்திடுவோம்
தள்ளித் துயரினைத் தாரணி காத்திடுவோம்
துள்ளிக் குதிப்போம் துணிந்து! 3.
தணிந்தால் மகிழ்ந்தே சகிப்போம் - பணிந்து
விலகி நலத்தை விளைவிப்பாய் நன்றே
உலகம் மதிக்கும் உனை! 4.
நனையத் துயரினில் நாடு - நினையாய்!
தினமும் முறையோ சினந்து! 5.
இரையெனக் கொண்டாய் எமையேன்! - வரையறை
இன்றி மரணத்தின் ஈட்டியெனப் பாய்கின்றாய்
சென்றுவிடு இன்றே சிறப்பு! 6.
வென்று களிக்க விடுவோமா? - இன்றென்ன
என்றுமுன் கோரமுகம் இவ்வுலகார் நெஞ்சினுள்
நின்று வருத்தும் நிலைத்து! 7.
நேற்றுப் படுத்தோரும் நீங்கினார் - கூற்றனே
தூக்கிக் கொடுவாள் துரத்தினும் நாமுன்னைத்
தாக்கி எழுவோம் தகர்த்து! 8.
ஞாலமிதைக் கவ்விடும் நஞ்சாகி - வாலசைத்து
வட்டமிடல் ஏனோ மறைந்தே யழித்தாலும்
காட்டுவோம் எம்திறன் காண்! 9.
பீடையைப் போக்கிப் பிறப்பெடுப்போம் - கூடையில்
கொத்துமலர் கொண்டாற்போல் கூத்தாடிப் பூமியில்
மெத்தச் சுகிப்போம் மிளிர்ந்து! 10.
0 Comments