என்னூர்
செம்மண் செழுமையில் சேர்புகழ் சூழெழும்
எம்மண்
இணுவையா மென்றிடுவாய் - இம்மண்ணை
எம்முயி
ராமென வேற்றிப் பரவுவாய்
நம்முன்னோர் காத்தமண் நம்பு! 1.
நம்பினார் மண்தனை
நாட்டப் பயிரனைத்தும்
கும்மிருள்
சூழ்வரை கொத்தினார் - தம்வியர்வை
தான்வார்த்தே
நாளும் சலிப்பிலா தாங்குழைத்தார்
ஆண்டு
பலவென் றறி 2.
அறிவிலா
ரென்றெண்ணி ஆங்கில நாட்டார்
பொறிவைத்த
அக்காலப் போதில் - அறிவொடு
நன்றெனச்
சைவராய் நானிலத்தில் வாழ்ந்தாங்கு
நின்றார்
நெறியொடு நிமிர்ந்து. 3.
நிமிர்பனைகள்
ஊரை நிறைத்திருக்கும் எங்கும்
தமிழ்ப்பண்
ஒலியே தவழும் - ஞிமிறெனத்
தோட்டத்தில்
நாளும் துயரற்
றுழைத்தேதம்
வாட்டம்
தவிர்த்தார் மகிழ்ந்து! 4.
மகிழ்ந்தார்
புகழ்ந்தார் மனத்தி
லுளதைப்
பகிர்ந்தார்
வளர்ந்தார் பாரில் - மிகுமோ
ஒருவூர்
இதுபோல் உலகிதி லென்றார்
திருவூரைப்
போற்றினார் திளைத்து! 5.
போற்றினார்
முத்தமிழ்ப் பொங்கலிட் டாடினார்
வேற்றுமை யின்றி
விருந்திட்டார் - ஏற்ற
வழிநின்
றுறவாடும் மாண்பினி லின்பம்
வழிந்தோட
வைத்தாரை வாழ்த்து!. 6.
வாழ்த்துரைக்
கேங்கி மயங்கிக் கிடந்திடார்
வாழ்வின்
நெறிக்கே மயங்குவார் - ஏழ்மை
தலைவிரித்
தாடினும் தாங்கியே நின்று
தலைநிமிர்ந்தார் என்றிங்கு
சாற்று! 7.
0 Comments